மான்ஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யா அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு பொம்மை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இயக்குனராக அறிமுகமாகி, ஹீரோ, வில்லன், குணச்சித்திர பாத்திரங்கள் என்று கலக்கி வருபவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் ஹீரோவாக நடித்த மான்ஸ்டர் படம் நல்ல வசூலை கொடுத்து ஹிட் அடித்தது. இதையடுத்து இயக்குனர் ராதா மோகன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் எஸ்.ஜே. சூர்யா.
இந்த படத்திற்கு பொம்மை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி ஆகியோர் நடிக்கிறார்கள். முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த திரில்லர் படமாக இது உருவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். காதல் கதை என்பதால் படப்பிடிப்பை மும்முரமாக முடித்து வரும் காதலர் தினமான பிப்.14ம் தேதி 2020ல் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
விஜய், அஜித் ஆகியோரை வைத்து மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் எஸ்,ஜே.சூர்யா என்பதும் குறிப்பிடத்தக்கது.